செய்திகள்
காரைக்காலில் பஸ்சில் கடத்திய 8½ கிலோ தங்கம் பறிமுதல்
காரைக்காலில் பஸ்சில் கடத்தி வந்த 8½ கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சுங்க இலாகா அதிகாரிகள் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ்சை காரைக்காலில் நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது பஸ்சில் இருந்த ஒரு பையில் 8½ கிலோ தங்கம் இருந்தது. அதற்கு எந்த உரிய ஆவணமும் இல்லை. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 2½ கோடியாகும்.
தங்கம் கடத்தியது தொடர்பாக காரைக்காலை சேர்ந்த ஒருவரையும், நாகூரை சேர்ந்தவரையும் அதிகாரிகள் நாகப்பட்டினத்துக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின்னரே எந்த ஊருக்கு தங்கம் கடத்தப்பட்டது என்பது தெரிய வரும்.
8½ கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது நாகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சுங்க இலாகா அதிகாரிகள் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ்சை காரைக்காலில் நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது பஸ்சில் இருந்த ஒரு பையில் 8½ கிலோ தங்கம் இருந்தது. அதற்கு எந்த உரிய ஆவணமும் இல்லை. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 2½ கோடியாகும்.
தங்கம் கடத்தியது தொடர்பாக காரைக்காலை சேர்ந்த ஒருவரையும், நாகூரை சேர்ந்தவரையும் அதிகாரிகள் நாகப்பட்டினத்துக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின்னரே எந்த ஊருக்கு தங்கம் கடத்தப்பட்டது என்பது தெரிய வரும்.
8½ கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது நாகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.