செய்திகள்
என்.எல்.சி. 2-வது சுரங்க அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தொழிலாளி குடும்பத்துடன் கைது
என்.எல்.சி. நிர்வாகம் வேலை வழங்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளி குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.
நெய்வேலி:
நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பத்தை அடுத்த வேப்பங்குறிச்சியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 38). இவர் தனது 3½ ஏக்கர் நிலத்தை என்.எல்.சி.க்கு கொடுத்துள்ளார்.
இதையடுத்து கோபாலகிருஷ்ணனுக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்கப்பட்டது. அவர் கடந்த 12 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 21.3.2015 முதல் கோபாலகிருஷ்ணனை பணிக்கு வரவேண்டாம் என என்.எல்.சி. அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால் கோபாலகிருஷ்ணன் மனமுடைந்தார். மேலும் தனக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி என்.எல்.சி. 2-வது சுரங்க அலுவலகம், என்.எல்.சி. தலைமை அலுவலகம், என்.எல்.சி. நில எடுப்பு அலுவலக அதிகாரிகளிடம் மனு கொடுத்தார். ஆனால் அவருக்கு வேலை வழங்கவில்லை.
இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன், தனது மனைவி ராஜலட்சுமி(30), மகன்கள் ராஜபிரியன்(10), விஜயராகவன்(8) ஆகியோரை அழைத்துக்கொண்டு என்.எல்.சி. 2-வது சுரங்க அலுவலகத்துக்கு வந்தார்.
அலுவலகம் முன்பு கோபாலகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
என்.எல்.சி. நிர்வாகம் வேலை வழங்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கு பணியில் இருந்த காவலாளிகளிடம் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்த தகவலின் பேரில் மந்தாரக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோபால கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர், “வேலை வழங்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக கோபாலகிருஷ்ணனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பத்தை அடுத்த வேப்பங்குறிச்சியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 38). இவர் தனது 3½ ஏக்கர் நிலத்தை என்.எல்.சி.க்கு கொடுத்துள்ளார்.
இதையடுத்து கோபாலகிருஷ்ணனுக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்கப்பட்டது. அவர் கடந்த 12 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 21.3.2015 முதல் கோபாலகிருஷ்ணனை பணிக்கு வரவேண்டாம் என என்.எல்.சி. அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால் கோபாலகிருஷ்ணன் மனமுடைந்தார். மேலும் தனக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி என்.எல்.சி. 2-வது சுரங்க அலுவலகம், என்.எல்.சி. தலைமை அலுவலகம், என்.எல்.சி. நில எடுப்பு அலுவலக அதிகாரிகளிடம் மனு கொடுத்தார். ஆனால் அவருக்கு வேலை வழங்கவில்லை.
இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன், தனது மனைவி ராஜலட்சுமி(30), மகன்கள் ராஜபிரியன்(10), விஜயராகவன்(8) ஆகியோரை அழைத்துக்கொண்டு என்.எல்.சி. 2-வது சுரங்க அலுவலகத்துக்கு வந்தார்.
அலுவலகம் முன்பு கோபாலகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
என்.எல்.சி. நிர்வாகம் வேலை வழங்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கு பணியில் இருந்த காவலாளிகளிடம் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்த தகவலின் பேரில் மந்தாரக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோபால கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர், “வேலை வழங்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக கோபாலகிருஷ்ணனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.