செய்திகள்
நங்கநல்லூரில் தபால் பெட்டியில் 3-வது முறையாக பாஸ்போர்ட்டுகள் கிடந்ததால் பரபரப்பு
நங்கநல்லூரில் தபால் பெட்டியில் இருந்து 3-வது முறையாக 15 பாஸ்போர்ட்டுகள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் தபால் பெட்டி உள்ளது. கடந்த 2-ந்தேதி தபால் ஊழியர், அந்த தபால் பெட்டியில் இருந்து கடிதங்களை எடுக்க முயன்ற போது, அதில் 23 பாஸ்போர்ட்டுகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த தபால் துறை அதிகாரிகள், அவற்றை ஆய்வு செய்து பின்னர் பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்போர்ட்டுகளை கைப்பற்றி, அதை தபால் பெட்டியில் போட்டுச் சென்றது யார்? என விசாரணை நடத்தி வந்தனர்.
தபால் பெட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியில் போலீசார் விசாரணை நடத்தியதில், அவை விமான நிலையத்தில் மாயமான பாஸ்போர்ட்டுகள் என்றும், அவற்றுக்கு பதிலாக மாற்று பாஸ்போர்ட்டுகள் பெற்றுவிட்டதாகவும் தெரிவித்தனர். இதனால் அந்த பாஸ்போர்ட்டுகள் சென்னை பாஸ்போர்ட்டு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
அதன்பிறகு கடந்த 6-ந்தேதி அதே தபால் பெட்டியில் 2-வது முறையாக மீண்டும் 13 பாஸ்போர்ட்டுகள் கிடந்தன. இது தொடர்பாக தபால் துறை அதிகாரிகள், பழவந்தாங்கல் போலீசில் புகார் செய்தனர்.
அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் வைக்கப்படாததால் தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகளை போட்டுச்சென்றவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
விமான நிலையத்தில் கடந்த ஆண்டு முதல் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின் பாஸ்போர்ட்டுகள் மாயமாகின. இதுதொடர்பாக விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளன.
நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதிகளில் விமான நிலையத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை நங்கநல்லூர் 48-வது தெருவில் உள்ள அதே தபால் பெட்டியில் தபால் ஊழியர் கடிதங்களை எடுக்க முயன்றபோது மீண்டும் 3-வது முறையாக 15 பாஸ்போர்ட்டுகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக நங்கநல்லூர் தபால் துறை அதிகாரிகள், பழவந்தாங்கல் போலீசில் மீண்டும் புகார் செய்தனர். தபால் பெட்டியில் கிடந்த 15 பாஸ்போர்ட்டுகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில் விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டுகளை தொலைத்தவர்கள், தபால் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளில் தங்களுடையது இருக்கிறதா? என பழவந்தாங்கல் போலீஸ் நிலையம் வந்து விசாரித்து விட்டு செல்கின்றனர்.
தபால் பெட்டியில் இருந்து இதுவரை 51 பாஸ்போர்ட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 23 பாஸ்போர்ட்டுகள், சென்னை பாஸ்போர்ட்டு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் 3-வது முறையாகவும் தபால் பெட்டியில் இருந்து பாஸ்போர்ட்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் வேறு எங்காவது கண்காணிப்பு கேமரா உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் தபால் பெட்டி உள்ளது. கடந்த 2-ந்தேதி தபால் ஊழியர், அந்த தபால் பெட்டியில் இருந்து கடிதங்களை எடுக்க முயன்ற போது, அதில் 23 பாஸ்போர்ட்டுகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த தபால் துறை அதிகாரிகள், அவற்றை ஆய்வு செய்து பின்னர் பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்போர்ட்டுகளை கைப்பற்றி, அதை தபால் பெட்டியில் போட்டுச் சென்றது யார்? என விசாரணை நடத்தி வந்தனர்.
தபால் பெட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியில் போலீசார் விசாரணை நடத்தியதில், அவை விமான நிலையத்தில் மாயமான பாஸ்போர்ட்டுகள் என்றும், அவற்றுக்கு பதிலாக மாற்று பாஸ்போர்ட்டுகள் பெற்றுவிட்டதாகவும் தெரிவித்தனர். இதனால் அந்த பாஸ்போர்ட்டுகள் சென்னை பாஸ்போர்ட்டு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
அதன்பிறகு கடந்த 6-ந்தேதி அதே தபால் பெட்டியில் 2-வது முறையாக மீண்டும் 13 பாஸ்போர்ட்டுகள் கிடந்தன. இது தொடர்பாக தபால் துறை அதிகாரிகள், பழவந்தாங்கல் போலீசில் புகார் செய்தனர்.
அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் வைக்கப்படாததால் தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகளை போட்டுச்சென்றவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
விமான நிலையத்தில் கடந்த ஆண்டு முதல் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின் பாஸ்போர்ட்டுகள் மாயமாகின. இதுதொடர்பாக விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளன.
நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதிகளில் விமான நிலையத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை நங்கநல்லூர் 48-வது தெருவில் உள்ள அதே தபால் பெட்டியில் தபால் ஊழியர் கடிதங்களை எடுக்க முயன்றபோது மீண்டும் 3-வது முறையாக 15 பாஸ்போர்ட்டுகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக நங்கநல்லூர் தபால் துறை அதிகாரிகள், பழவந்தாங்கல் போலீசில் மீண்டும் புகார் செய்தனர். தபால் பெட்டியில் கிடந்த 15 பாஸ்போர்ட்டுகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில் விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டுகளை தொலைத்தவர்கள், தபால் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளில் தங்களுடையது இருக்கிறதா? என பழவந்தாங்கல் போலீஸ் நிலையம் வந்து விசாரித்து விட்டு செல்கின்றனர்.
தபால் பெட்டியில் இருந்து இதுவரை 51 பாஸ்போர்ட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 23 பாஸ்போர்ட்டுகள், சென்னை பாஸ்போர்ட்டு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் 3-வது முறையாகவும் தபால் பெட்டியில் இருந்து பாஸ்போர்ட்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் வேறு எங்காவது கண்காணிப்பு கேமரா உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.