செய்திகள்

அரியலூர் அருகே தனியார் சிமெண்டு ஆலையில் 50 லாரிகள் சிறைப்பிடிப்பு

Published On 2016-06-04 22:27 IST   |   Update On 2016-06-04 22:27:00 IST
அரியலூர் அருகே தனியார் சிமெண்டு ஆலையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஆலத்தியூர் கிராமத்தைச் சுற்றிலும் தனியார் சிமெண்டு ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்கம் உள்ளது. மிகவும் ஆழமாக தோண்டப்பட்டு சுண்ணாம்புக்கற்களை வெட்டி எடுப்பதால் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆலத்தியூர் கிராம மக்கள் இன்று தனியார் சிமெண்டு ஆலைக்கு எதிராக திடீர் பேராட்டத்தில் ஈடுபட்டனர். சுண்ணாம்புக் கற்கள் ஏற்ற வந்த 50-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்த அவர்கள், சுண்ணாம்புக் கற்களை வெட்டி எடுக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சிமெண்டு ஆலை நிர்வாகம் 150 அடி ஆழத்தில் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதாகவும் அவர்கள் கூறினர். அவர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News