செய்திகள்

காஞ்சீபுரம் அருகே கார் கவிழ்ந்து வக்கீல் பலி

Published On 2016-05-31 12:02 IST   |   Update On 2016-05-31 12:02:00 IST
காஞ்சீபுரம் அருகே பாலாற்று பாலத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் வக்கீல் பலியானார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் வேதாசலம் நகரைச் சேர்ந்தவர் தண்டபாணி (40) வக்கீல். இவர் நண்பர்கள் 3 பேருடன் திண்டிவனத்திலிருந்து காஞ்சீபுரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.

காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தில் கார் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டினை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே வக்கீல் தண்டபாணி பரிதாபமாக பலியானார். மற்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விபத்து குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். உயிரிழந்த தண்டபாணிக்கு நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News