செய்திகள்

மண்ணிவாக்கத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

Published On 2016-05-28 07:40 IST   |   Update On 2016-05-28 07:40:00 IST
மண்ணிவாக்கத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கம் குமரன்நகர் பகுதியில் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம். மையம் உள்ளது.

நேற்றுமுன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் அங்கிருந்த ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்க முயற்சித்துள்ளனர். பணத்தை எடுக்க முடியாததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் ஏ.டி.எம் எந்திரத்தின் ஒரு பகுதியை உடைத்து சாலையில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன், ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடைக்கப்பட்ட ஏ.டி.எம் எந்திரத்தை பார்வையிட்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையர்கள் அதில் உள்ள பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பணத்தை அவர்களால் எடுக்க முடியவில்லை, அந்த எந்திரத்தில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை பற்றி வங்கி அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பிறகு தெரியவரும். ஆனால் பணம் அப்படியே இருப்பதால் எந்திரத்தில் இருந்து பணம் கொள்ளை போகவில்லை என தெரிகிறது.

இந்த மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்தால் தான் எத்¢¢தனை பேர் இந்த எந்திரத்தை உடைத்தார்கள் என்பது தெரியவரும். விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News