செய்திகள்

காரைக்குடி அருகே சேவல் சண்டை நடத்திய 3 வாலிபர்கள் கைது

Published On 2016-05-23 10:13 IST   |   Update On 2016-05-23 10:13:00 IST
காரைக்குடி அருகே சேவல் சண்டை நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி:

காரைக்குடி அருகே சேவல் சண்டை நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவண போஸ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். செங்கரைபள்ளி அருகே சென்றபோது 3 பேர் அங்கு தடை செய்யப்பட்ட சேவல் சண்டையை பந்தயம் வைத்து நடத்தி கொண்டு இருந்தனர்.

அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பிஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் சேவல் சண்டை நடத்தியது பெத்தாட்சி குடியிருப்பை சேர்ந்த தவமணி பாண்டி (வயது39), கருப்பையா (40), தினேஷ்குமார் (20) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

Similar News