செய்திகள்
காஞ்சீபுரம் அருகே குப்பை தொட்டியில் வீசப்பட்ட 1000 வாக்காளர் அட்டைகள்
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அரசு போக்குவரத்து பணிமனை எதிரே உள்ள குப்பை தொட்டியில் குவியல், குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அரசு போக்குவரத்து பணிமனை எதிரே உள்ள குப்பை தொட்டியில் குவியல், குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தன.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தாசில்தார் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
குப்பை தொட்டியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் கிடந்தன. மேலும் லட்டர்பேடுகள், வாக்காளர் பட்டியல், பூத் சிலிப்புகள் குவியலாக இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட வாக்காளர் அட்டைகள் அனைத்தும் காஞ்சீபுரம், உத்திரமேரூர் தொகுதிக்குப்பட்ட வாக்காளர்களுக்கு உள்ளவை என்பது விசாரணையில் தெரிய வந்தது.
வாக்காளர் அட்டைகளை வீசி சென்றது யார்? அவர்களுக்கு இவ்வளவு வாக்காளர் அட்டைகள் கிடைத்தது எப்படி என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி அறிந்ததும் உதவி கலெக்டர் அருண் தம்புராஜ் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறும்போது, வாக்காளர் அட்டைகளை வீசி சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் எந்த பிரச்சனையும் இன்றி ஓட்டு போடலாம் என்றார்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கஜலட்சுமி கூறும்போது, குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது பழைய வாக்காளர் அட்டைகள் ஆகும்.
பழைய வாக்காளர் அட்டையாக இருந்தாலும் அதனை குப்பையில் வீசியது தவறு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
குப்பைத் தொட்டியில் வாக்காளர் அட்டை கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அரசு போக்குவரத்து பணிமனை எதிரே உள்ள குப்பை தொட்டியில் குவியல், குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தன.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தாசில்தார் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
குப்பை தொட்டியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் கிடந்தன. மேலும் லட்டர்பேடுகள், வாக்காளர் பட்டியல், பூத் சிலிப்புகள் குவியலாக இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட வாக்காளர் அட்டைகள் அனைத்தும் காஞ்சீபுரம், உத்திரமேரூர் தொகுதிக்குப்பட்ட வாக்காளர்களுக்கு உள்ளவை என்பது விசாரணையில் தெரிய வந்தது.
வாக்காளர் அட்டைகளை வீசி சென்றது யார்? அவர்களுக்கு இவ்வளவு வாக்காளர் அட்டைகள் கிடைத்தது எப்படி என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி அறிந்ததும் உதவி கலெக்டர் அருண் தம்புராஜ் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறும்போது, வாக்காளர் அட்டைகளை வீசி சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் எந்த பிரச்சனையும் இன்றி ஓட்டு போடலாம் என்றார்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கஜலட்சுமி கூறும்போது, குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது பழைய வாக்காளர் அட்டைகள் ஆகும்.
பழைய வாக்காளர் அட்டையாக இருந்தாலும் அதனை குப்பையில் வீசியது தவறு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
குப்பைத் தொட்டியில் வாக்காளர் அட்டை கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.