செய்திகள்

மயிலாடுதுறையில் விஜயகாந்த பிரசாரம்

Published On 2016-05-06 17:09 IST   |   Update On 2016-05-06 21:35:00 IST
மயிலாடுதுறை சின்னகடை வீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை சின்னகடை வீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:–

கடந்த 50 ஆண்டு காலமாக தி.மு.க., அ.தி.மு.க இருகட்சிகளும் தமிழகத்தை ஆட்சி செய்து மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அண்ணா தொடங்கிய கட்சியில் புகுந்த கருநாகம் கருணாநிதி, எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியில் புகுந்த கருநாகம் ஜெயலலிதா. இவர்களை மீண்டும் ஆட்சி செய்ய விடலாமா? அதற்காக தான் தற்போது அமைந்துள்ள மக்கள் நலக்கூட்டணி மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்.

புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன் புதிய பஸ்நிலையம் கட்டி மக்களின் பயன் பாட்டிற்கு வழங்குவோம். மக்கள் நலக்கூட்டணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News