தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்து- 2 பள்ளி மாணவர்கள் பலி

Published On 2023-10-30 16:30 GMT   |   Update On 2023-10-30 16:30 GMT
  • மினி பேருந்து கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
  • காயமடைந்தவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதி.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரண்ட பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மினி பேருந்து கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வத்திராயிருப்பு பகுதியில் இருந்து புதுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த மினி பேருந்து விபத்தில் சிக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News