தமிழ்நாடு

சோழவரம் அருகே 102 வயது மூதாட்டி மரணம்

Published On 2022-09-07 06:47 GMT   |   Update On 2022-09-07 06:47 GMT
  • மூதாட்டி வள்ளியம்மாளுக்கு உடலில் எந்த நோயின் தாக்கமும் இல்லை.
  • 102 வயதிலும் அவர் தனது வேலைகளை தானே செய்து நடமாடி வந்தார்.

பொன்னேரி:

சோழவரம் அடுத்த விஜயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவேலு. சென்னை துறைமுகத்தில் ஊழியராக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 102). இவர்களுக்கு 4 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர்.

கேசவேலு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து வள்ளியம்மாள் தனது இளையமகன் பிரவு வீட்டில் வசித்து வந்தார். அவரது வீட்டில் பேரன், பேத்தி கொள்ளுப்பேரன் உள்ளிட்ட 42 குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.

மூதாட்டி வள்ளியம்மாளுக்கு உடலில் எந்த நோயின் தாக்கமும் இல்லை. 102 வயதிலும் அவர் தனது வேலைகளை தானே செய்து நடமாடி வந்தார். அவரை குடும்பத்தினர் கவனித்து வந்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூதாட்டி வள்ளியம்மாள் வீட்டில் இருந்தபோது திடீரென கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் அடையவில்லை.

இந்த நிலையில் நேற்று மாலை வள்ளியம்மாள் இறந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் சோகம் அடைந்தனர். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது.

'இதுகுறித்து குடும்பத்தினர் கூறும்போது 102 வயதில் வள்ளியம்மாள் இறந்து விட்டார். அவர் 5 தலைமுறை கண்டு இருக்கிறார். இது வரை அவரது உடலில் பெரிய அளவில் நோய் பாதிப்பு ஏற்பட்டதில்லை. அவரது வேலைகளை அவரே செய்து வந்தார்' என்றனர்.

Tags:    

Similar News