தமிழ்நாடு

நெல்லையில் வெள்ளத்தின்போது பாம்பு கடித்து ஒருவர் பலி- 14 பேருக்கு சிகிச்சை

Published On 2023-12-25 10:15 GMT   |   Update On 2023-12-25 10:15 GMT
  • பாம்பு கடித்ததில் 9 பேர் பாதிப்பு.
  • விஷப்பூச்சிகள் கடித்ததில் 5 பேர் பாதிப்பு.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின்போது பாம்பு கடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், விஷப்பூச்சிகள் உள்ளிட்டவை கடித்தததில் 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அம்மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.

இவர்களில், பாம்பு கடித்ததில் 9 பேரும், விஷப்பூச்சிகள் கடித்ததில் 5 பேர் என மொத்தம் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News