டென்னிஸ்

வியன்னா ஓபன் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது

Published On 2025-10-25 01:48 IST   |   Update On 2025-10-25 01:48:00 IST
  • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
  • இரட்டையர் பிரிவு காலிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

வியன்னா:

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- குரோஷியாவின் ஆண்ட்ரியா கோரெசன் ஜோடி, குரோஷியாவின் பவிக்-எல் சால்வடாரின் மார்செலோ ஜோடி உடன் மோதியது.

இதில் பாம்ப்ரி ஜோடி 6-7, 6-4 என சமனிலையில் இருந்தபோது எதிர் ஜோடி காயத்தால் விலகியது. இதையடுத்து, பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்குள் நுழைந்தது.

Tags:    

Similar News