டென்னிஸ்

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் சின்னர் வெற்றி

Published On 2025-11-12 21:58 IST   |   Update On 2025-11-12 21:58:00 IST
  • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
  • முதல் சுற்றில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.

துரின்:

உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.

அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் 16-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

ஜோர்ன் போர்க் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், முதல் சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 7-5, 6-1 என வென்றார்.

Tags:    

Similar News