டென்னிஸ்

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: காயத்தால் ஜோகோவிச் விலகல்

Published On 2025-11-10 00:56 IST   |   Update On 2025-11-10 00:56:00 IST
  • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
  • இதில் செர்பியாவின் ஜோகோவிச் காயம் காரணமாக விலகினார்.

துரின்:

ஏதென்ஸ் தலைநகர் கிரீசில் ஹெலனிக் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜோகோவிச் ஏ.டி.பி. ஒற்றையரில் வென்ற 101-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக இத்தாலியில் நடக்கும் ஏ.டி.பி. பைனல்ஸ் தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக இத்தாலியின் லாரன்சோ முசெட்டி வாய்ப்பு பெற்றார்.

Tags:    

Similar News