டென்னிஸ்

பெர்லின் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் இத்தாலி வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

Published On 2025-06-18 20:37 IST   |   Update On 2025-06-18 20:37:00 IST
  • ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
  • 2வது சுற்றில் இத்தாலி வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

பெர்லின்:

பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

இன்று நடந்த ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, துனீசியாவின் ஒன்ஸ் ஜபேர் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஒன்ஸ் ஜபேர் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News