டென்னிஸ்

பெர்லின் ஓபன் டென்னிஸ்: கோகோ காப் அதிர்ச்சி தோல்வி

Published On 2025-06-20 02:22 IST   |   Update On 2025-06-20 02:22:00 IST
  • ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
  • 2வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

பெர்லின்:

பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. அமெரிக்காவின் கோகோ காப் இரண்டாவது சுற்றுகு நேரடியாக தகுதி பெற்றிருந்தார்.

நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்க வீராங்கனையான கோகோ காப், சீனாவின் வாங் ஜின்யு உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய வாங் ஜின்யு 6-3, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 2 வீராங்கனையான கோகோ காப் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News