டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் நம்பர் 2 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

Published On 2025-07-02 10:56 IST   |   Update On 2025-07-02 10:56:00 IST
  • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
  • முதல் சுற்றில் நம்பர் 2 வீராங்கனை கோகோ காப் தோல்வி அடைந்தார்.

லண்டன்:

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நம்பர் 2 வீராங்கனையும், சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபன் போட்டியில் பட்டம் வென்றவரான அமெரிக்காவைச் சேரந்த கோகோ காப், உக்ரைனை சேர்ந்த யாஸ்ட் ரெம்ஸ்கா உடன் மோதினார்.

இதில் ரெம்ஸ்கா 7-6 (7-3), 6-1 என்ற நேர் செட் கணக்கில் கோகோ காப்பை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் தரவரிசையில் நம்பர் 2 வீராங்கனையான கோகோ காப் முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.

இதேபோல தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சீனாவின் குயின்வென் ஜெங்கும் முதல் சுற்றில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News