விளையாட்டு

பிவி சிந்து

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2022-07-15 10:14 GMT   |   Update On 2022-07-15 10:14 GMT
  • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் காலிறுதி ஆட்டத்தில் முதல் சுற்றை துய் ஹான் யூ கைப்பற்றினார்.
  • காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் ஹான் யூ ஆகியோர் மோதினர்.

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் ஹான் யூ ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை துய் ஹான் யூ கைப்பற்றினார்.பின்னர் சிறப்பாக விளையாடிய சிந்து அடுத்த இரண்டு சுற்றுகளை கைப்பற்றினார் .இதனால் 17-21, 21-11, 21-19. என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News