விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: சுருச்சி இந்தர்சிங், விஜய்வீர் சித்து, தங்கப்பதக்கம் வென்று அசத்தல்

Published On 2025-04-09 10:43 IST   |   Update On 2025-04-09 10:43:00 IST
  • பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.
  • இந்தியா 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.

பியூனஸ் அயர்ஸ்:

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அர்ஜென்டினாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீராங்கனை 18 வயதான சுருச்சி இந்தர்சிங் முதல் முறையாக தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

8 பேர் இடையிலான இறுதி சுற்றில் சுருச்சி 244.6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். நடப்பு தொடரில் இந்தியாவின் 3-வது தங்கப்பதக்கம் இதுவாகும். சீனாவின் கியான் வெய் 241.9 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், ஜியாங் ரேன்சிங் 221 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

முன்னதாக பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் ஏமாற்றம் அளித்தார். அவர் தகுதி சுற்றோடு (13-வது இடம்) வெளியேற்றப்பட்டார்.

இதற்கிடையில், ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டலில், விஜய்வீர் சித்து தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்திலும் (3 தங்கம் உள்பட 7 பதக்கம்), இந்தியா 4 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கத்துடன் 2-வது இடத்திலும் உள்ளன.

Tags:    

Similar News