விளையாட்டு
null
உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச்சுடுதல்: குர்ப்ரீத் சிங் வெள்ளி- இந்தியா 3-வது இடம்
- 3 தங்க பதக்கத்துடன் இந்தியா 3ஆவது இடம் பிடித்துள்ளது.
- சீனா 12 தங்கத்துடன் முதல் இடத்தை பிடித்தது.
எகிப்து நாட்டின் கெய்ரோவில் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் குர்ப்ரீத் சிங் ஆண்களுக்கான 25மீ சென்டர் பையர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். உக்ரைன் வீரர் தங்கமும், பிரான்ஸ் வீரர் வெண்கல பதக்கமும் வென்றனர்.
ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் இந்தியா 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 13 பதக்கங்களை வென்றது.
சீனா 12 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் வென்றது. தென்கொரியா 7 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கல பதக்கம் வென்றது.
சம்ரத் ராணா (10மீ ஏர் பிஸ்டல்), ரவீந்தர் சிங் (50மீ ஸ்டேண்டர்டு பிஸ்டல் மற்றும் 10 மீ ஏர் பிஸ்டல் அணி) ஆகியோர் தங்கம் வென்றனர்.