விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஜோடி

Published On 2025-05-30 17:54 IST   |   Update On 2025-05-30 17:54:00 IST
  • சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி மலேசியாவின் கோ ஸ்ஸே ஃபீ- ரூர் இசுதீன் ஜோடியுடன் மோதினர்.
  • இதில் இந்திய ஜோடி 21-17, 21-15, என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, மலேசியாவின் கோ ஸ்ஸே ஃபீ- ரூர் இசுதீன் ஜோடியுடன் மோதினர்.

இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-17, 21-15, என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. 

Tags:    

Similar News