விளையாட்டு

கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் சதீஷ்குமார்

Published On 2024-12-08 23:47 IST   |   Update On 2024-12-08 23:47:00 IST
  • கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது.
  • இதில் இந்திய வீரரான சதீஷ்குமார் சாம்பியன் பட்டம் வென்றார்.

கவுகாத்தி:

கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் சதீஷ்குமார் கருணாகரன், சீனாவின் ஜூ ஜுவான் உடன் மோதினார்.

இந்தப் போட்டியில் சதீஷ்குமார் 21-17, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டி 44 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

கடந்த ஆண்டு நடந்த ஒடிசா மாஸ்டர்ஸ் சூப்பர் 100 போட்டியில் சதீஷ்குமார் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News