விளையாட்டு

புரோ கபடி லீக்: புனே, உ.பி. அணிகள் இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது

Published On 2024-11-19 21:25 IST   |   Update On 2024-11-19 21:25:00 IST
  • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
  • இதில் அரியானா அணி 8-வது வெற்றியைப் பதிவு செய்தது.

நொய்டா:

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் புனேரி பால்டன், உபி யோதாஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

இறுதியில், இரு அணிகளும் 29-29 என்ற புள்ளிகளை எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.

Tags:    

Similar News