விளையாட்டு
null

புரோ கபடி லீக்: குஜராத் ஜெயன்ட்ஸ் அணி பெங்காலுடன் மோதல்

Published On 2024-02-08 07:39 GMT   |   Update On 2024-02-08 07:44 GMT
  • குஜராத் அணி 11-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
  • 2-வது ஆட்டத்தில் அரியானா-உ.பி. யோதாஸ் மோதுகின்றன.

கொல்கத்தா:

10-வது புரோ கபடி 'லீக்' போட்டியில் 11-வது கட்ட ஆட்டங்கள் கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி 27-22 என்ற கணக்கில் டெல்லியை வீழ்த்தி 13-வது வெற்றியை பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் புனே 40-31 என்ற கணக்கில் பெங்களூரை தோற்கடித்தது.

இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. குஜராத் அணி 11-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பெங்கால் 8-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் அரியானா-உ.பி. யோதாஸ் மோதுகின்றன. அரியானா 11-வது வெற்றி வேட்கையில் உள்ளது.

ஜெய்ப்பூர், புனே அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி. யோதாஸ் வாய்ப்பை இழந்துவிட்டன.

Tags:    

Similar News