விளையாட்டு
2026 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை நடத்தும் வாய்ப்பை பெற்றது இந்தியா..!
- 2009ஆம் ஆண்டு ஐதராபாத்தில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டது.
- 16 வருடத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டு டெல்லியில் நடத்தப்பட இருக்கிறது.
பேட்மிண்டன் உலகத் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்த வருடம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறும் என உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
2025 சாம்பியன்ஷிப் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்- சிராக் ஷெட்டி ஜோடி வெண்கல பதக்கம் வென்றது.
16 வருடத்திற்குப் பிறகு இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த உள்ளது. 2009ஆம் ஆண்டு ஐதராபாத்தில் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.