விளையாட்டு

இந்திய ஆக்கி ஜூனியர் அணி வீரர்கள்

சுல்தான் ஜோகூர் கோப்பை ஆக்கி போட்டி- இந்திய ஜூனியர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

Published On 2022-10-28 19:12 GMT   |   Update On 2022-10-28 19:12 GMT
  • இந்தியா-பிரிட்டன் அணிகளுக்கு இடையோன ஆட்டம் டிராவில் முடிந்தது.
  • புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் உள்ளது.

மலேஷியாவில் நடைபெற்று வரும் சுல்தான் ஜோகூர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கிப் போட்டியில் இந்திய ஜூனியர் ஆடவர் அணி நேற்று பிரிட்டன் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது. இதில் இந்தியா தரப்பில் பூவண்ணா சிபி (7வது நிமிடம்), அமந்தீப் (50வது நிமிடம்), அரைஜீத் சிங் ஹண்டல் (53வது), ஷர்தா நந்த் திவாரி (56வது, 58வது) ஆகியோர் கோல் அடித்தனர்.

பிரிட்டன் தரப்பில் மேக்ஸ் ஆண்டர்சன் (1வது, 40வது நிமிடம்), ஹாரிசன் ஸ்டோன் (42வதுநிமிடம் ) ஜாமி கோல்டன் (54வது, 56வது நிமிடம் )கோல் அடித்தனர். இதையடுத்து இந்த போட்டி 5-5 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்ததால். இதனால் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தை பிடித்தது.

முன்னதாக ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 6-1 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதையடுத்து இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா ஜூனியர் அணிகள் மோதுகின்றன.

Tags:    

Similar News