கால்பந்து

கால்பந்து உலகின் முதல் பில்லியனரானார் ரொனால்டோ

Published On 2025-10-08 17:21 IST   |   Update On 2025-10-08 17:21:00 IST
  • போர்ச்சுகீசிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ
  • அவரது நிகர சொத்து மதிப்பு $1.4 பில்லியன் என அதிகரித்துள்ளதாக Bloomberg நிறுவனம் கூறியுள்ளது.

போர்த்துகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அவரது நிகர சொத்து மதிப்பு $1.4 பில்லியன் என அதிகரித்துள்ளதாக Bloomberg நிறுவனம் கூறியுள்ளது. சவுதி கிளப் அல்-நாஸ்ருடனான அவரது லாபகரமான ஒப்பந்தம், நைக் மற்றும் ஆர்மானி போன்ற பிராண்டுகளுடனான விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் பிற வணிக முயற்சிகளால் இத்தகைய பெருமையை அவர் அடைந்துள்ளார்.

இந்த விஷயத்தில் அவர் லயோனல் மெஸ்ஸி போன்ற பிற கால்பந்து ஜாம்பவான்களை மிஞ்சியுள்ளார். இதனால் அவர் விளையாட்டின் முதல் பில்லியனரானார். பிரேசிலிய கால்பந்து வீரரான ரொனால்டோ நாசாரியோவின் (R9 என அழைக்கப்படுபவர்) 2025 ஆம் ஆண்டு வரை அவரது நிகர மதிப்பு சுமார் $160 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News