விளையாட்டு
புரோ லீக் ஆக்கி: அர்ஜெண்டினா மகளிர் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
- ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் தலா 3 கோல்கள் போட்டு சமநிலையில் இருந்தன.
- இதனால் ஷூட் அவுட் முறை மூலம் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.
ரோட்டர்டாம்:
சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் நடத்தப்படும் புரோ லீக் ஆக்கி தொடரில் மகளிர் அணிகளுக்கானகலீக் போட்டிகள் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் நடைபெற்றது.
இதில் உலக தர வரிசையில் 2வது இடம் இடத்தில் உள்ள அர்ஜெண்டினா அணியை இந்திய மகளிர் ஆக்கி அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரண்டு அணிகளும் தலா 3 கோல்கள் போட்டதால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இதனால் வெற்றியை முடிவு செய்ய ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது.
இதில், இந்திய மகளிர் அணியில் நேஹா மற்றும் சோனிகா ஆகியோர் தலா ஒரு கோல் போட்டு இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். முடிவில் ஷூட் அவுட் முறையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.