கிரிக்கெட் (Cricket)

பாலியல் குற்றச்சாட்டு: கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளுக்கு தடை - உ.பி. லீக் போட்டியில் ஆட முடியாது

Published On 2025-08-17 11:54 IST   |   Update On 2025-08-17 11:54:00 IST
  • கோரக்பூர் லயன்ஸ் அணி யாஷ் தயாளை ரூ.7 லட்சத்துக்கு வாங்கியது.
  • உ.பி. 20 ஓவர் லீக் போட்டி இன்று தொடங்கி செப் டம்பர் 6-ந்தேதி வரை நடக்கிறது.

ராயல்' சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள். உத்தரப் பிரதே சத்தை சேர்ந்த இவர் மீது சமீப காலமாக பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

காசியாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் யாஷ் தயாள் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்பு றுத்தியதாக புகார் அளித் தார். இது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெய்ப்பூரைச் சேர்ந்தபெண் ஒருவர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார் அளித்தார். 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரி வித்தார். இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி யாஷ் தயாள் தாக்கல் செய்த மனுவை ஜெய்ப்பூர் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அவர் கைது செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த நிலையில் உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம் நடத்தும் 20 லீக் தொடரில் விளையாட யாஷ் தயாளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடருக்கான ஏலத்தில் அவரை கோரக்பூர் லயன்ஸ் அணி ரூ.7 லட்சத்துக்கு வாங்கியது. வழக்குகள் முடியும் வரை யாஷ் தயாளை அணியில் சேர்க்க வேண்டாம் என்று கோரக்பூர் அணிக்கு உ.பி. கிரிக்கெட் சங்கம் உத்தர விட்டுள்ளது.

பாலியல் வழக்குகளில் சிக்கியுள்ளதால், ஐ.பி.எல். வீரர் யாஷ் தயாளின் கிரிக் கெட் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. உ.பி. 20 ஓவர் லீக் போட்டி இன்று தொடங்கி செப் டம்பர் 6-ந்தேதி வரை நடக்கிறது.

Tags:    

Similar News