கிரிக்கெட் (Cricket)
ஆர்.சி.பி. அணி மோதும் போட்டிகளை நடத்த புனே விருப்பம்- மராட்டிய கிரிக்கெட் சங்கம் தகவல்
- பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலியானார்கள்.
- அடுத்த ஆண்டு நடைபெறும் (2026) போட்டிக்கான உள்ளூர் மைதானமாக பெங்களூரு இருக்கிறது.
மும்பை:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக இந்த சீசனில் (2025) ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.
வெற்றிக் கொண்டாட்ட பேரணியின் போது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலியானார்கள். இதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டியை நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு நடைபெறும் (2026) போட்டிக்கான உள்ளூர் மைதானமாக பெங்களூரு இருக்கிறது. ஆர்.சி.பி. அணி நிர்வாகம் திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், தர்மசாலா, நவி மும்பை, புனே, கான்பூர் ஆகிய 6 மைதானங்களில் ஒன்றை தேர்வு செய்யலாம் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஆர்.சி.பி. போட்டிகளை நடத்த புனே மைதானம் விருப்பத்துடன் இருப்பதாக மராட்டிய கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.