எகிறிய ஐபிஎல் பிராண்ட் மதிப்பு.. சிஎஸ்கே அணியை பின்னுக்கு தள்ளிய RCB, MI
- டாடா குழுமம் தனது டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை 2028 வரை நீட்டித்தது.
- பஞ்சாப் அணியின் பிராண்ட் வேல்யூ கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 39.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
உலகளாவிய முதலீட்டு வங்கி ஹௌலிஹான் லோகி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி ஐபிஎல் (இந்தியன் பிரிமீயர் லீக்) வணிக மதிப்பு இந்த வருடம் 12.9% உயர்ந்து 18.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட 13.8 சதவீதம் உயர்ந்து இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
அசோசியேட் ஸ்பான்சர் எனும் இடங்களை மட்டுமே My11Circle, Angel One, RuPay மற்றும் CEAT - டயருக்கு விற்பனை செய்ததன் மூலம், பிசிசிஐ ரூ.1,485 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. இது முந்தைய சுழற்சியை விட 25 சதவீதம் அதிகமாகும்.
டாடா குழுமம் தனது டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை 2028 வரை நீட்டித்தது. இதற்காக அந்த நிறுவனம் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்துள்ளது.
ஆர்சிபி அணியின் பிராண்ட் மதிப்பு 2024-ல் 227 மில்லியனாக இருந்தது. தற்போது 269 மில்லியனாக உயர்ந்தது. மும்பை இந்தியன்ஸ் (மும்பை) 242 மில்லியனுடன் 2-வது இடத்திற்கும், சிஎஸ்கே 235 மில்லியனுடன் 3-வது இடத்திலும் உள்ளது.
குறிப்பாக பஞ்சாப் அணியின் பிராண்ட் வேல்யூ கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 39.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது மற்ற எந்த அணியை காட்டிலும் மிகவும் அதிகமாகும்.