ஐ.பி.எல்.(IPL)
null

IPL 2025: ராஜஸ்தானுக்கு 220 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி

Published On 2025-05-18 17:21 IST   |   Update On 2025-05-18 17:44:00 IST
  • ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து விட்டது.
  • பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் ரேஸில் உள்ளது.

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 59-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியுள்ளது.

ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து விட்டது. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் ரேஸில் உள்ளதால் அந்த அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற கடினமாக போராடும்.

அதே சமயம் ராஜஸ்தான் அணி எஞ்சிய ஆட்டங்களில் அச்சமின்றி அதிரடியாக ஆடி எதிரணிகளுக்கு அதிர்ச்சி அளிக்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். காயத்தில் இருந்து மீண்ட சஞ்சு சாம்சன் இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.

இந்நிலையில், இப்போட்டியின் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது.

இதன்மூலம், 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களிமிறங்குகிறது.

இப்போட்டியில் அதிகபட்சமாக நெஹல் வதோரா 70, ஷஷங் சிங் 59, ஸ்ரேயாஸ் ஐயர் 30 என்கள் எடுத்தனர்.

Tags:    

Similar News