5ஆவது டெஸ்ட்: ஓவல் மைதான ஆடுகள பராமரிப்பாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுதம் கம்பீர்..!
- லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
- ஆடுகளத்தை பார்வையிட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து 2-1 எனத் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
5ஆவது மற்றும் கடைசி போட்டி வருகிற 31ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்திய அணி வீரர்கள் இன்று காலை ஓவல் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஆடுகளத்தை இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பார்வைிட்டதாக தெரிகிறது. அப்போது ஆடுகளம் பாராமரிப்பாளர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக புகார் அளிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
இது கம்பீருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆடுகளம் பராமரிப்பாளரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீங்கள் யாரிடமும் சென்று புகார் அளியுங்கள். ஆனால், என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களிடம் நீங்கள் சொல்ல முடியாது என கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.