கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்து- இந்தியா மோதும் 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: லார்ட்ஸ் பிட்ச் ரிப்போர்ட்

Published On 2025-07-09 12:38 IST   |   Update On 2025-07-09 12:38:00 IST
  • இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை தொடங்குகிறது.
  • முதல் இரு போட்டிகளுடன் ஒப்பிடும் போது இது சவாலான ஆடுகளமாக இருக்கும்.

லண்டன்:

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இந்திய நேரப்படி நாளை (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

லார்ட்ஸ் ஆடுகளம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். போக போக பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும். கடந்த இரு போட்டிகளில் பார்த்ததை விட லார்ட்ஸ் ஆடுகளத்தில் புற்கள் கொஞ்சம் அதிகமாக உள்ளது. முதல் இரு போட்டிகளுடன் ஒப்பிடும் போது இது சவாலான ஆடுகளமாக இருக்கும்.

சமீபத்தில் இங்கு நடந்த ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 31 விக்கெட்டுகளை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News