கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் ஆலோசகர் ஆகிறாரா எம்.எஸ்.தோனி?

Published On 2025-08-31 01:55 IST   |   Update On 2025-08-31 01:55:00 IST
  • இந்தியா, இலங்கையில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.
  • கடந்த 2021 டி20 உலகக் கோப்பையிலும் தோனி இந்திய அணி ஆலோசகராக செயல்பட்டிருந்தார்.

மும்பை:

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் விளையாடுகின்றன. தொடரை நடத்தும் அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தானாகவே தகுதி பெற்றன.

இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை தக்கவைக்கும் நோக்கில் இந்திய அணி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக சுப்மன் கில்லை இந்திய டி20 அணியின் புதிய துணை கேப்டனாக நியமித்துள்ளது.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தோனியை பி.சி.சி.ஐ. நிர்வாகம் அணுகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனாலும், இதற்கு தோனி என்ன முடிவெடுத்துள்ளார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

ஏற்கனவே, எம்.எஸ்.தோனி 2021-ல் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட்டார். ஆனால் அந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றோடு நடையை கட்டியது.

Tags:    

Similar News