கிரிக்கெட் (Cricket)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20: ஆடும் லெவனில் சுப்மன் கில்- ஹர்திக் பாண்ட்யா

Published On 2025-12-08 16:34 IST   |   Update On 2025-12-08 16:34:00 IST
  • டி20 தொடருக்கான முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது.
  • சுப்மன் கில் முழுவதுமாக குணமடைந்துள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் டெஸ்ட், ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்காவும் ஒருநாள் தொடரை இந்தியாவும் கைப்பற்றியது.

இதனையடுத்து இரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. டி20 தொடருக்கான முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது.

இந்த போட்டியில் காயம் காரணமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடாத இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில், நாளை நடக்கவுள்ள முதல் டி20 போட்டியில் விளையாடுவார் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பிடிக்காமல் இருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் ஆடும் லெவனில் களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News