விளையாட்டு

உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார்- பிரிஜ் பூஷன் சரண் சிங் சவால்

Published On 2023-05-22 08:54 GMT   |   Update On 2023-05-22 08:54 GMT
  • பிரிஜ் பூஷன் சவாலை மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஏற்றுக் கொண்டனர்.
  • பிரிஜ் பூஷன் சரண் சிங்-ஐ உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என வீரர்கள் தெரிவித்திருந்தனர்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக், ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற வினேஷ் போகட் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

பிரிஜ் பூஷன் சரண் சிங்-ஐ உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு அவர் தயாராக இருப்பதாக பிரிஜ் பூஷன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருக்கும் அதே சோதனை தனது சோதனையுடன் நடத்தப்பட்டால் உண்மையை கண்டறியும் சோதனைக்கு நானும் தயார்.

என்று பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.

பிரிஜ் பூஷன் சவாலை மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஏற்றுக் கொண்டனர். அவர் 2 பேரை மட்டும்தான் சோதனைக்கு அழைக்கிறார். ஆனால் நாங்கள் ஏழு பேரும் இந்த சோதனைக்கு தயாராக இருக்கிறோம் என வினேஷ் போகட் கூறியுள்ளார்.


Tags:    

Similar News