விளையாட்டு
பராக்

பெங்களூருக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்

Published On 2022-04-26 21:32 IST   |   Update On 2022-04-26 21:32:00 IST
பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வீரர் பராக் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீசியது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான பட்லர் 8, படிகல் 7, அஸ்வின் 17 என பவர் பிளேயில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறியது.

இதனையடுத்து சம்சன் - மிட்செல் ஜோடி பொறுமையாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 27 ரன்கள் எடுத்த சம்சன் ஹசரங்கா பந்து வீச்சில் போல்ட் ஆனார். அடுத்ததாக ஹெட்மயர் 3, மிட்செல் 16, போல்ட் 5, கிருஷ்ணா 2 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு பக்கம் சிறப்பாக ஆடிய ரியான் பராக் 56 ரன்கள் எடுத்தார். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ், ஹசில்வுட், ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Similar News