விளையாட்டு
ரோகித் சர்மா

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்

Published On 2022-02-19 16:33 IST   |   Update On 2022-02-19 18:25:00 IST
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ள நிலையில் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ நியமித்துள்ளது.
புதுடெல்லி:

தென் ஆப்பிரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்ததையடுத்து விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். 

இதனையடுத்து அடுத்த மாதம் இலங்கை அணிக்கெதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில் ரோகித் சர்மாவை புதிய டெஸ்ட் அணியின் கேப்டனாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. 

ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருந்த நிலையில் தற்போது 3 வடிவிலான அணியிலும் அவர் கேப்டனாக பணியாற்றுவார்.

Similar News