செய்திகள்
உலக டேபிள் டென்னிஸ்: மணிகா பத்ரா ஏமாற்றம்
ஹூஸ்டனில் நடைபெற்று வரும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை இரண்டு பிரிவுகளில் காலிறுதியோடு வெளியேறினார்.
ஹூஸ்டனில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா கலப்பு இரட்டையர், பெண்கள் இரட்டையர் பிரிவில் கலந்து கொண்டார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் பத்ரா, ஜி. சத்தியன் உடன் இணைந்து காலிறுதியில் ஜப்பான் ஜோடியை எதிர்கொண்டார். இதில் பத்ரா ஜோடி 1-3 எனத் தோல்வியடைந்து வெளியேறியது.
பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் அர்ச்சனா கமத் உடன் இணைந்து விளையாடினார். இதில் 0-3 எனத் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.