செய்திகள்
நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ரா, மிதாலி ராஜ் உள்பட 12 பேருக்கு கேல் ரத்னா விருது

Published On 2021-11-02 22:54 GMT   |   Update On 2021-11-02 23:20 GMT
கேல் ரத்னா விருது ஒரே ஆண்டில் இரட்டை இலக்கை எண்ணிக்கையில் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
புதுடெல்லி:

தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன. 

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருது பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல்ரத்னா விருதுக்கு 12 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு விருதுடன் ரூ.25 லட்சம் ரொக்கப்பரிசும் கிடைக்கும்.

இதில் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), ரவிக்குமார் (மல்யுத்தம்), லவ்லினா (குத்துச்சண்டை), பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹரா, மணிஷ் நார்வல் (துப்பாக்கிச் சுடுதல்), சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), பிரமோத், கிருஷ்ணா (பாட்மின்டன்), கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), இந்திய பெண்கள் ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், சுனில் சேத்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி) சேர்த்து 12 பேர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News