செய்திகள்
ஆண்டர்சன் மிரட்டல் பந்து வீச்சு - 21 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்து இந்தியா திணறல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி 7 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
லீட்ஸ்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - கேஎல் ராகுல் களமிறங்கினர். ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரில் கேஎல் ராகுல் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த புஜாரா இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 1 ரன்னில் ஆண்டர்சன் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
இதனையடுத்து விராட் கோலி-ரோகித் சர்மா ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு ஆடினார். ரன் வரவில்லை என்றாலும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொறுமையாக ஆடிய விராட் கோலி பவுண்டரிக்கு ஆசைப்பட்டு ஆண்டர்சன் பந்து வீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இந்திய அணி 21 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு ஆடி வருகிறார். தற்போது வரை இந்திய அணி 18 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 56 பந்துகளில் 9 ரன்களும் ரகானே 23 பந்துகளில் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.