செய்திகள்
ஒலிம்பிக் மல்யுத்தம்- அரையிறுதியில் இந்திய வீரர் தீபக் புனியா அதிர்ச்சி தோல்வி
ஆட்டத்தின் துவக்கம் முதலே அமெரிக்க வீரரை எதிர்கொள்ள முடியாமல் இந்திய வீரர் தீபக் புனியா திணறினார்.
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. இன்று ஆடவருக்கான மல்யுத்த போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், 86 கிலோ எடைப்பிரிவிருக்கான காலிறுதி போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா, 6-3 என்ற கணக்கில் சீனாவின் லின் சூசனை வீழ்த்தினார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. இன்று ஆடவருக்கான மல்யுத்த போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், 86 கிலோ எடைப்பிரிவிருக்கான காலிறுதி போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா, 6-3 என்ற கணக்கில் சீனாவின் லின் சூசனை வீழ்த்தினார்.
அதன்பின்னர் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், அமெரிக்க வீரர் டேவிட் டெய்லரை எதிர்கொண்டார் தீபக் புனியா. ஆனால் அரையிறுதி ஆட்டம் அவருக்கு கடும் சவாலாக இருந்தது. ஆட்டத்தின் துவக்கம் முதலே அமெரிக்க வீரரை எதிர்கொள்ள முடியாமல் தீபக் புனியா திணறினார்.
அவரை ஒரு புள்ளிகள் கூட எடுக்க விடாமல் அமெரிக்க வீரர் தாக்குதல் தொடுத்தார். இறுதியில், தீபக் புனியா 0-10 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார்.