செய்திகள்
நீரஜ் சோப்ரா

ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா அசத்தல் - முதல் வாய்ப்பிலேயே இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்

Published On 2021-08-04 00:50 GMT   |   Update On 2021-08-04 06:54 GMT
டோக்கியோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே அபாரமாக செயல்பட்டார்.
டோக்கியோ:

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.

இன்று காலை ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். 

இவர் தனது முதல் வாய்ப்பில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார். இதன்மூலம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்றார்.

ஆகஸ்ட் 7-ம் தேதி ஈட்டி எறிதலுக்கான இறுதிச்சுற்று போட்டி நடைபெற உள்ளது.
Tags:    

Similar News