செய்திகள்
தஜிந்தர்பால் சிங் டோர்

ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி: இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் ஏமாற்றம்

Published On 2021-08-03 17:31 IST   |   Update On 2021-08-03 17:31:00 IST
இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் குரூப் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்திருந்த நிலையில் 19.99 மீட்டர் தூரத்தை எறிந்து 13-வது இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தார்.
ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியின் தகுதிச்சுற்று இன்று நடைபெற்றது. முதலில் குரூப் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்தவர்களுக்கான தகுதி போட்டி நடைபெற்றது. இதில் 16 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு குரூப்பிலும் சேர்த்து முதல் 12 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அல்லது 21.20 மீட்டருக்கு அதிகமான தூரத்திற்கு எறியும் வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.

ஒவ்வொரு வீரருக்கும் தலா மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்படும். இந்திய வீரர் தஜிந்தர் சிங் டோர் முதல் வாய்ப்பில் 19.99 மீட்டர் தூரம் எறிந்தார். 2-வது மற்றும் 3-வது வாய்ப்புகள் பவுல் ஆனது. இதனால் 19.99 மீட்டர் அவரின் இலக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர் எறிந்த தூரம் 13-வது இடத்தைப் பிடித்தது. இதனால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்.

Similar News