செய்திகள்
டிஎன்பிஎல் கிரிக்கெட்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேலம் அணிக்கு 186 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல் டிராகன்ஸ்

Published On 2021-07-30 16:33 GMT   |   Update On 2021-07-30 16:33 GMT
திண்டுக்கல் அணியின் விவேக் 59 ரன்களும், ஹரி நிஷாந்த் 52 ரன்களும் எடுத்தனர்.
 
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தேர்வு செய்த திண்டுக்கல் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து 185 ரன்களை குவித்தது.

திண்டுக்கல் அணியின் வீரர் விவேக் அதிக பட்சமாக 59 ரன்களை குவித்தார். கேப்டனாக இருக்கும் ஹரி நிஷாந்த் 52 ரன்களை எடுத்தார். சேலம் அணி வீரர் லோகேஷ் ராஜ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதையடுத்து சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 186 ரன்கள் இலக்குடன் களத்தில் இறங்க இருக்கிறார்கள். 
Tags:    

Similar News