செய்திகள்
டிஎன்பிஎல் கிரிக்கெட் - டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சு தேர்வு
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
சென்னை:
5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இன்று 15-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. சேலம் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை. ஒரு தோல்வியுடன் 5-வது இடத்தில் உள்ளது.
திண்டுக்கல் அணி வீரர்கள்:-
1.ஹரி நிஷாந்த் 2.அருண் 3.மணிபாரதி 4.விவேக் 5. விக்னேஷ் 6.சுவாமி நாதன் 7.சிலம்பரசன் 8. சிங் 9.ஹரிஹரன் 10. ஸ்ரீனிவாசன் 11. சுதேஷ்
சேலம் அணி வீரர்கள்:-
1.விஜய் சங்கர் 2. அஸ்வின் 3. அபிஷேக் 4. சுசில் 5. லோகேஷ் 6. கணேஷ் மூர்த்தி 7.கார்த்திகேயன் 8. சுகாஷ் 9.பெரியசாமி 10. சுந்தர் 11. டேரில் ஃபெராரியோ