செய்திகள்
அவினாஷ் சப்லே

3000 மீ தடை தாண்டி ஓட்டம் - இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தார் இந்திய வீரர்

Published On 2021-07-30 06:46 IST   |   Update On 2021-07-30 06:46:00 IST
இந்திய தடகள வீரர் அவினாஷ் சப்லே தேசிய சாதனையை படைத்திருந்தாலும் அவர் இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் 3000 மீட்டருக்கான தடை தாண்டிய ஓட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய வீரர் அவினாஷ் சப்லே பந்தய தூரத்தை 8 நிமிடம் 18:12 விநாடிகளில் கடந்து 7ம் இடம் பிடித்தார்.

முதல் 3 நபர்களே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

Similar News