செய்திகள்
கொழும்பு மைதானம்

2வது டி20 போட்டியில் இந்தியா பேட்டிங்... 4 வீரர்கள் அறிமுகம்

Published On 2021-07-28 14:32 GMT   |   Update On 2021-07-28 14:32 GMT
இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், சகாரியா மற்றும் ராணா ஆகியோர் அறிமுகமாகிறார்கள்.
கொழும்பு:

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட  டி 20 தொடரில்  இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரண்டாவது ஆட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இந்திய அணியின் ஆல் ரவுண்டர் குருணால் பாண்ட்யாவிற்கு கொரோனா தொற்று உறுதியானதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், சகாரியா மற்றும் ராணா ஆகியோர் அறிமுகமாகிறார்கள்.

இந்திய அணி வீரர்கள்: 1. ஷிகர் தவான் (கேப்டன்), 2. ருதுராஜ் கெய்க்வாட், 3. தேவ்தத் படிக்கல், 4. சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), 5.நிதீஷ் ராணா, 6.புவனேஷ்வர் குமார், 7. குல்தீப் யாதவ், 8. ராகுல் சாஹர், 9. நவ்தீப் சைனி, 10 சேத்தன் சகாரியா. 11.வருண் சக்கரவர்த்தி.

இலங்கை அணி வீரர்கள்: 1. அவிஷ்கா பெர்னாண்டோ, 2. மினோட் பனுகா (விக்கெட் கீப்பர்), 3. சதீரா சமரவிக்ரமா, 4. தனஞ்சய டி சில்வா, 5. ரமேஷ் மெண்டிஸ், 6. தசுன் ஷனகா (கேப்டன்), 7. வனிந்து ஹசரங்கா, 8. சமிகா கருணாரத்ன, 9. இசுரு உதனா, 10. துஷ்மந்தா, 11.அகிலா தனஞ்செயா.
Tags:    

Similar News